Skip to main content

Posts

Featured

தேடித் தேடித் தேடுகிறேன்

அவளை நீங்கள் பார்த்தீரா? ஆழக் கடலில் அலைவரும் என்றென் ஆழ மனத்துள் அலைகள் கிளப்பி வாழும் ஒவ்வொரு கணமும் என்னை வாழ்த்த, வாட்ட, வதைக்க, நினைக்க ஏழை என்முன் தோன்றி மறைந்து ஏக்கம் எல்லாம் உள்ளில் விதைத்துத் தோழமை போலும் தொல்லையன் போலும்  தோன்ற சீன்சோன் செய்திடுவாளே! அவளது குரலைக் கேட்டீரா?  ஆலங்கட்டி மழையுடன் சேர்த்து அதகளம் செய்யும் புயலதன் நடுவே  காலம் கடந்து நேரம் மறந்து கடைசிச் சொட்டு சொல்லுக்காக ஓலமிட்டுக் கதறும் என்னை ஒருநொடி நெருங்கி பலநொடி விலகி வேலை அலைபோல் நாடகம் நடித்து வெற்றுச் சிரிப்பை உதிர்த்திடுவாளே! அவளது முகவரி அறிவீரா?  ஒருமுறை பௌர்ணமி கண்டதனாலே ஒவ்வொரு இரவும் நகரும் போதில் தெருவிளக்குளிடம் நின்று இதுவும் தேயும் வளரும் வெண்ணிலவா என  திருமுகம் தேடித் திரிந்து திரிந்து தேய்வேன் என்பதைத் தெரிந்திருந்தாலும் மிருகத்தின் தலை நீவுதல் போல மெலிதாய்த் தீண்டி அகலுகிறாளே அவளது மொழியை உணர்வீரா?  எனக்குள் கொதிக்கும் எரிமலை வெடிப்பை  எத்தனைச் சொல்லால் எழுதி வைத்தாலும் மனத்துள் வளரும் மலைகளை எல்லாம் மலராய் அவள்முன் குவித்து வைத்தாலும்  நினைக்கும் பொழுதில் மின்னல் சவுக்கடி நெஞ்சு பிளப்பதைக

Latest Posts

தூக்கத்தவம்

அகமியின் பெருமூச்சு

கிழித்த காகிதங்களில்

த் பஞ்சாயத்து

தற்காலிகப் பூச்சு

தொங்கும் இலைத் துடிப்பு