பாவின் வேந்தன்
பாவின் வேந்தனே பைந்தமிழ் நேசனே தாவி உன்னிடம் தான்சரண் என்றுபா கூவி வந்திடும் ! கூர்சொலால் சாதியின் வாவி வற்றவே வார்த்தைகள் கோத்தவா ! காதல் காவியம் கன்னியத் திராவிடம் நீதி சொல்லிடும் நித்திலப் பாடல்கள் ஓதி உண்டிடும் ஒண்டமிழ்க் கவிதைகள் சாதி அணைத்திடுஞ் சாகர மானவா ! உன்பி றந்தநாள் உற்சாகப் பாவினால் என்க டன்தனை எழிலுற முற்றினேன் இன்னும் தாமதம் என்னவோ ? மண்ணிலே இன்னு மோர்பிறப் பெடுந்துவந் தோங்குக ! -விவேக்பாரதி 29.04.2016