முகவரி
முகவரி
வாழ்வின் முகப்பு பக்கத்தின்
முதல் வரி
மண்ணாண்ட மன்னனின்
வீரம், கொடை
மண்ணுகுக் கிடைத்த முகவரி
லயம், சுருதி
லட்சணத் தாளம்
பண்ணுக்கு கிடைத்த முகவரி
வாழ்வின் முகப்பு பக்கத்தின்
முதல் வரி
மண்ணாண்ட மன்னனின்
வீரம், கொடை
மண்ணுகுக் கிடைத்த முகவரி
லயம், சுருதி
லட்சணத் தாளம்
பண்ணுக்கு கிடைத்த முகவரி
சோகமோ மகிழ்வோ
விழி உவந்து வெளிக் காட்டுவது
முகத்தில் அகத்தின் முகவரி !
விரிசல் பெற்ற
கரிசல் காடு
வறட்சியைச் சொல்லும் முகவரி !
மென்ஜாடையில் ! ஒரு
கண்ஜாடை வந்தால்
காதல் சம்மதத்தின் முகவரி !
பச்சை வயலும்
பளிங்குநீர்ச் சுனையும்
பசுமை விளைத்த முகவரி !
முகவரி கொடுத்த
தாய்நிலத்தைக் காப்பது
நம் நன்றியைச் சொல்லும் முகவரி
ஏனெனில்
முகவரி தான்
வாழ்வின் முகப்புப் பக்கத்தின்
முதல்வரி !
-விவேக்பாரதி
04.12.2013
Comments
Post a Comment