அன்பெனின்
பத்துமாதம் நமைசுமந்து பாசம் காட்டி
பசிவந்தால் தன்ரத்தம் பாலா யூட்டி
சத்துபல சேர்ந்திடவே நமைவ ளர்த்துச்
சந்தோஷப் படுமன்பு தாயின் அன்பு !
வித்தகனாய் நாம்வளர வெற்றிப் பதை
விதவிதமாய் நிதம்காட்டி பெருமை கூட்டி
எத்திசையும் நமைப்புகழ வைக்கும் அந்த
ஏற்றமுடைய பெருமன்பு தந்தை அன்பு !
நல்லவையே நம்மனதில் என்றும் வைத்து
நலிவுகளை உளம்விட்டுக் களைந்து ! நித்தம்
வெல்வதற்காய் வழிவகுத்து நன்மை தந்து
வெற்றிதரும் தூயன்பு ஆசா னன்பு !
வல்வினையால் கேடேதும் வந்தால் கூட
வல்லதொரு சக்தியினால் அதனை நீக்கி
அல்லலினை அறுத்தேதான் அருளும் தந்து
ஆருயிரைப் பேணுமன்பு ஈச னன்பு !
நெல்வயலை நிதமுழுது மணிவி தைத்து
நன்னீரை நாள்தோறும் அங்கே ஊற்றி
நல்லுலகின் பசிப்பிணியை நீக்கி என்றும்
நல்லவையே தருமன்பு உழவ னன்பு !
சொல்லினிதாய் சுவையினிதாய் நாளும் கட்டி
சொப்பனத்தில் கற்பனைகள் எழுத்தில் சேர்த்து
எல்லையில் லாதமிழை பேணி யேதான்
ஏற்றங்கொ டுக்குமன்பு புலவ னன்பு !
அழைக்காம லேவந்து மண்ணில் உள்ள
ஆருயிர்கள் ஆயிரத்தை வளர்க்கத் தூவும்
மழையன்பு ! மறையன்பு ! மேகக் கன்னி
மசக்கையில் பிறக்கின்ற இயற்கை யன்பு !
பிழையாக நட்புகொண்டு உள்ளொன் றுவைத்து
புறம்பாக வேறொன்று பேசி நின்று
விழைவதெலாம் தீமையினை விளைக்க எண்ணி
விதித்துன்பம் தருமன்பு செயற்கை அன்பு !
பனித்துளியும் புல்மேலே கொண்ட அன்பு
பாசாங்கே இல்லாத பசுமை யன்பு
இனிப்புடைய தேன்துளியும் மலரின் மேலே
இயல்பாகக் கொளுமன்பு இனிமை அன்பு !
நனிபசுவும் பால்போழிந்து நவில்வ தெல்லாம்
நன்றிஎதிர்ப் பார்க்காத நன்மை அன்பு
கனியொத்தத் தமிழ்மொழியின் கவிதை எல்லாம்
காரிருளைப் போக்குகின்ற தனிமை அன்பு !
தன்மனதில் துயர்வந்து ஆட்கொண் டாலும்
தனக்குள்ளே அதைமறைத்து ஊரார் சிரிக்க
என்னென்ன வோசெய்யும் கோமா ளிகளும்
எப்பொழுதும் காட்டுமன்பு ஈடில் அன்பு !
என்கவிதை முற்றிற்றே அதுவும் இங்கே
எழில்தமிழில் சொல்வதெல்லாம் ஒன்று தானே !
இன்னுலகில் அன்பென்ப தெல்லோ ருக்கும்
இன்றியமை யாதமையும் கேடில் செல்வம் !
-விவேக்பாரதி
08.11.2014
பசிவந்தால் தன்ரத்தம் பாலா யூட்டி
சத்துபல சேர்ந்திடவே நமைவ ளர்த்துச்
சந்தோஷப் படுமன்பு தாயின் அன்பு !
வித்தகனாய் நாம்வளர வெற்றிப் பதை
விதவிதமாய் நிதம்காட்டி பெருமை கூட்டி
எத்திசையும் நமைப்புகழ வைக்கும் அந்த
ஏற்றமுடைய பெருமன்பு தந்தை அன்பு !
நல்லவையே நம்மனதில் என்றும் வைத்து
நலிவுகளை உளம்விட்டுக் களைந்து ! நித்தம்
வெல்வதற்காய் வழிவகுத்து நன்மை தந்து
வெற்றிதரும் தூயன்பு ஆசா னன்பு !
வல்வினையால் கேடேதும் வந்தால் கூட
வல்லதொரு சக்தியினால் அதனை நீக்கி
அல்லலினை அறுத்தேதான் அருளும் தந்து
ஆருயிரைப் பேணுமன்பு ஈச னன்பு !
நெல்வயலை நிதமுழுது மணிவி தைத்து
நன்னீரை நாள்தோறும் அங்கே ஊற்றி
நல்லுலகின் பசிப்பிணியை நீக்கி என்றும்
நல்லவையே தருமன்பு உழவ னன்பு !
சொல்லினிதாய் சுவையினிதாய் நாளும் கட்டி
சொப்பனத்தில் கற்பனைகள் எழுத்தில் சேர்த்து
எல்லையில் லாதமிழை பேணி யேதான்
ஏற்றங்கொ டுக்குமன்பு புலவ னன்பு !
அழைக்காம லேவந்து மண்ணில் உள்ள
ஆருயிர்கள் ஆயிரத்தை வளர்க்கத் தூவும்
மழையன்பு ! மறையன்பு ! மேகக் கன்னி
மசக்கையில் பிறக்கின்ற இயற்கை யன்பு !
பிழையாக நட்புகொண்டு உள்ளொன் றுவைத்து
புறம்பாக வேறொன்று பேசி நின்று
விழைவதெலாம் தீமையினை விளைக்க எண்ணி
விதித்துன்பம் தருமன்பு செயற்கை அன்பு !
பனித்துளியும் புல்மேலே கொண்ட அன்பு
பாசாங்கே இல்லாத பசுமை யன்பு
இனிப்புடைய தேன்துளியும் மலரின் மேலே
இயல்பாகக் கொளுமன்பு இனிமை அன்பு !
நனிபசுவும் பால்போழிந்து நவில்வ தெல்லாம்
நன்றிஎதிர்ப் பார்க்காத நன்மை அன்பு
கனியொத்தத் தமிழ்மொழியின் கவிதை எல்லாம்
காரிருளைப் போக்குகின்ற தனிமை அன்பு !
தன்மனதில் துயர்வந்து ஆட்கொண் டாலும்
தனக்குள்ளே அதைமறைத்து ஊரார் சிரிக்க
என்னென்ன வோசெய்யும் கோமா ளிகளும்
எப்பொழுதும் காட்டுமன்பு ஈடில் அன்பு !
என்கவிதை முற்றிற்றே அதுவும் இங்கே
எழில்தமிழில் சொல்வதெல்லாம் ஒன்று தானே !
இன்னுலகில் அன்பென்ப தெல்லோ ருக்கும்
இன்றியமை யாதமையும் கேடில் செல்வம் !
-விவேக்பாரதி
08.11.2014
Comments
Post a Comment