காதல் கிளி

அடி கிளியே ! 
அடி கிளியே !
என் நெஞ்சத்தினில் மஞ்சமிட்டு
உனக்கொரு இடம்கொடுத்தேன் !

நீ பறந்து ! 
என்னை மறந்து !
எந்தன் நெஞ்சமது கொஞ்சமென
நஞ்சையுண்ட வலி கொடுத்தாய் !

உனைக் கண்ட 
ஒருநொடி போதும்
பூக்கள் மலர்ந்துவிடும்
அடி நீ கண்டும் 
திரும்பிச் சென்றால்
இதயம் உலர்ந்துவிடும் !

என் கண்ணாடி மனதுக்குள்ளே
உந்தன் பிம்பம் !
அதை உடைக்கும் கல்லேனவே
உந்தன் மௌனம் !

கண்ணாடி உடைந்தால் கூட
பிம்பமது நூறைத் தோன்றும் !

காதலி ! உன் இருவிழி !
என்னைப் பைத்தியமாக்கும்
படுகுழி தானா ? சொல்லு !

அழுது அழுது கண்கள் வலிக்கின்றதே
எழுத மறந்த கரம் துடிகின்றதே !

கண்ணால் எனைநீ 
முன்னால் பார்த்தால்
இவைகள் நின்றுவிடும் !
இல்லை என்றால் 
உந்தன் நினைவு
என்னுயிர் கொன்று விடும் !

காதலே! காயங்களா ?
வாழ்கையின் மாயங்களா ?

நெஞ்சம் எனும் வீணையில்
காதல் இசை மீட்டுதே !
கொஞ்சம் சுகம் ஆயினும்
மௌனம் வலி கூட்டுதே !

-விவேக்பாரதி
29.11.2014

Comments

Popular Posts