மழையே வா

மேகம் தூவும் கண்ணீர் மழைதான் !
   மேனி நனைத்திட வேண்டும்!
வேகக் காற்றும், புனல்நீர், ஊற்றும்
   விரைவில் குளிர்ந்திட வேண்டும் !

தாகம் தீர்க்கும் தண்ணீர் அமுதம்
   தடையிலாது வர வேண்டும் !
காகம் கவிழ்த்த காவிரி நதிபோல்
   கரையுடைத்து வா மழையே !

யாகம் செய்தோம் யார்தான் உன்னை
   வெறுப்பார் வாவா மழையே !
மோகனப் பொலிவே உனைவிட உலகில்
   மோட்சம் ஒன்றும் இலையே !

-விவேக்பாரதி
 06.02.2014

Comments

Popular Posts