அல்லா அல்லா !

கேடிலாத வாழ்வை எய்தக்
கோடி கோடி கோடி முறை
தேடி உன்னை அழைக்காது
இருப்பேனோ? அல்லா!

வாடி நின்ற பொழுது நானும்
பேடி இந்தக் குறைகள் தானாய்
ஓடிப் போக
உன் பெயர் சொல்லாது
போவேனோ? அல்லா!

அல்லா அல்லா அல்லா!
சொல்லெனும் வில் கொண்டு
பொல்லாரை நல்லார் ஆக்கிடும்
வல்லவனே! ஒளியுருவே!
பல்லாயிரம் போற்றி
நின் பொன்னடிக்குச் சமர்ப்பணமே!

-விவேக்பாரதி
20.10.2013

Comments

Popular Posts