கலைந்த கனவு
கான மிசைத்திடும் குயிலும் - எந்தன்
காதிற் முத்தமிழ் கூவுதற் போலும்
மோனத் திருந்தநம் வையம் - கொஞ்சம்
முக்தி அடைந்தே சீரிய செந்தமிழ்
ஞானம் வளர்ந்தே இனிதாய் - இந்த
ஞால வெளியிடை உலவுதற் போலும்
நானு மோர்க்கனா கண்டேன் - அதை
நற்றமி ழாலே பாடியே நின்றேன் !
எத்திக்கும் வாழ்ந்திடும் மக்கள் - தான்
என்றும் மொழிந்திடும் பேச்சினி லெல்லாம்
சுத்தத்தேன் தமிழிலே பேசி - அதன்
சுந்தரம் தன்னைப் பெரிதெனப் போற்றி
சித்தமுந் தெளிவுறக் கண்டேன் - அந்த
சிறிது காலாத்தில் செழுஞ்சுகம் எய்த
அத்தனை எண்ணமும் பாழாய்ப் - போக
அமைந்ததே சமுகம் ஒ! கலைந்ததோ கனவு ?
கவிதை : https://soundcloud.com/vivekbharathi/audio2
-விவேக்பாரதி
21.12.2014
காதிற் முத்தமிழ் கூவுதற் போலும்
மோனத் திருந்தநம் வையம் - கொஞ்சம்
முக்தி அடைந்தே சீரிய செந்தமிழ்
ஞானம் வளர்ந்தே இனிதாய் - இந்த
ஞால வெளியிடை உலவுதற் போலும்
நானு மோர்க்கனா கண்டேன் - அதை
நற்றமி ழாலே பாடியே நின்றேன் !
எத்திக்கும் வாழ்ந்திடும் மக்கள் - தான்
என்றும் மொழிந்திடும் பேச்சினி லெல்லாம்
சுத்தத்தேன் தமிழிலே பேசி - அதன்
சுந்தரம் தன்னைப் பெரிதெனப் போற்றி
சித்தமுந் தெளிவுறக் கண்டேன் - அந்த
சிறிது காலாத்தில் செழுஞ்சுகம் எய்த
அத்தனை எண்ணமும் பாழாய்ப் - போக
அமைந்ததே சமுகம் ஒ! கலைந்ததோ கனவு ?
கவிதை : https://soundcloud.com/vivekbharathi/audio2
-விவேக்பாரதி
21.12.2014