காதல் ராணி

கண்ணோடு கண்ணாய் நீயும்
  கலந்தாயே காதல் ராணி
மண்மீது பூக்கும் பூவாய்
  மகிழ்ந்தாயே ஆசை தேவி
விண்ணோடு தூவு கின்ற
  விண்சாரத் தண்ணீர் போல
எண்ணோடு அடங்கா அன்பைப்
  பொழிந்தாயே நீயும் வாழ்க !


-விவேக்பாரதி
10.05.2014

Comments

Popular Posts