ஆத்திகம்
ஆத்திகம் என்ப திங்கே
ஆழக்கால் அளத்தல் போலே
பாத்திரத்தின் மேன்மை காட்டும்
பக்திதான் அளக்கும் கோலே !
தெய்வத்தைத் தொழுது நின்றால்
தேய்மானம் தீரும் என்பான்
உய்வதெலாம் அவன்செய லென்றே
உணர்ந்திவன் உணர்க வென்பான் !
ஒளியுருவைக் கும்பிட் டிடுவான்
ஓமென்று சிலையைத் தொழுவான்
களிப்பிலும் கஷ்டத் திலுமே
கடவுளே என்று அழுவான் !
மாறுதல்கள் ஆயிரம் இருந்தும்
மதங்களிலே ஒன்றி ணைவான்
வேறுபாடு களைதல் ஒன்றே
வேதங்களி லெல்லாம் புனைவான் !
சாத்திரங்கள் சொல்லும் உண்மை
சங்கதிகள் உரையச் செய்வான்
நேத்திரங்கள் மூடி மெல்ல
நேர்மையினைத் தொழுதே உய்வான் !
ஆசைகள் துறந்து வாழ்தோர்
ஆசிகளைப் பெற்று வாழ்வான்
பூசைசெய்து வாழ்ந்தே புவியில்
புண்ணியங்க ளோடு வீழ்வான் !
-விவேக்பாரதி
25.07.2014
ஆழக்கால் அளத்தல் போலே
பாத்திரத்தின் மேன்மை காட்டும்
பக்திதான் அளக்கும் கோலே !
தெய்வத்தைத் தொழுது நின்றால்
தேய்மானம் தீரும் என்பான்
உய்வதெலாம் அவன்செய லென்றே
உணர்ந்திவன் உணர்க வென்பான் !
ஒளியுருவைக் கும்பிட் டிடுவான்
ஓமென்று சிலையைத் தொழுவான்
களிப்பிலும் கஷ்டத் திலுமே
கடவுளே என்று அழுவான் !
மாறுதல்கள் ஆயிரம் இருந்தும்
மதங்களிலே ஒன்றி ணைவான்
வேறுபாடு களைதல் ஒன்றே
வேதங்களி லெல்லாம் புனைவான் !
சாத்திரங்கள் சொல்லும் உண்மை
சங்கதிகள் உரையச் செய்வான்
நேத்திரங்கள் மூடி மெல்ல
நேர்மையினைத் தொழுதே உய்வான் !
ஆசைகள் துறந்து வாழ்தோர்
ஆசிகளைப் பெற்று வாழ்வான்
பூசைசெய்து வாழ்ந்தே புவியில்
புண்ணியங்க ளோடு வீழ்வான் !
-விவேக்பாரதி
25.07.2014
Comments
Post a Comment