தூங்கட்டும் துளி
தூங்கட்டும் தூங்கட்டும் புல்லின் மேலே
துளிபனியும் அறைமாதக் குழந்தைப் போலே
ஏங்கித்தான் அழவேண்டும் அதுவும் இங்கே
எழுந்திட்டால் அதனாலே தூங்கி டட்டும் !
வாங்கித்தான் ஆகவேண்டும் காசுக் கன்பை
வாழ்ந்திடவே மற்றாரைப் பொய்பு கழ்ந்துத்
தாங்கித்தான் ஆகவேண்டும் ! மானம் வெட்கம்
தளர்த்தித்தான் வாழவேண்டும் உலகில் இன்று !
கண்விழித்தால் பனித்துளிக்கு மாசி னாலே
கலங்கல்தான் ஏற்படுமே ! அதுவும் சற்று
மண்ணில்தான் விழுந்துவிட்டால் மண்ணை அள்ளும்
மதிகெட்டோர் அதற்குஊறு செய்யக் கூடும் !
விண்ணாளும் சூரியனே உடனே வந்து
விழுங்கிவிடு பனித்துளியை ! இதனைச் செய்தால்
கண்விழிக்கும் முன்னாலே சொர்கம் சென்று
கடவுளவன் காலடியில் தூங்கி விடுமே !
-விவேக்பாரதி
15.09.2014
துளிபனியும் அறைமாதக் குழந்தைப் போலே
ஏங்கித்தான் அழவேண்டும் அதுவும் இங்கே
எழுந்திட்டால் அதனாலே தூங்கி டட்டும் !
வாங்கித்தான் ஆகவேண்டும் காசுக் கன்பை
வாழ்ந்திடவே மற்றாரைப் பொய்பு கழ்ந்துத்
தாங்கித்தான் ஆகவேண்டும் ! மானம் வெட்கம்
தளர்த்தித்தான் வாழவேண்டும் உலகில் இன்று !
கண்விழித்தால் பனித்துளிக்கு மாசி னாலே
கலங்கல்தான் ஏற்படுமே ! அதுவும் சற்று
மண்ணில்தான் விழுந்துவிட்டால் மண்ணை அள்ளும்
மதிகெட்டோர் அதற்குஊறு செய்யக் கூடும் !
விண்ணாளும் சூரியனே உடனே வந்து
விழுங்கிவிடு பனித்துளியை ! இதனைச் செய்தால்
கண்விழிக்கும் முன்னாலே சொர்கம் சென்று
கடவுளவன் காலடியில் தூங்கி விடுமே !
-விவேக்பாரதி
15.09.2014
Comments
Post a Comment