தமிழ்ச்சாரதி

பாரதி என்பான் உலக கவி !
பா ரதமேறித் தமிழ் கவியால்
பாரதம் முழுதும் பவனி வந்தான் !!
பார்ப்போர்க் கெல்லாம் நலங் கொடுத்தான் !!

பாரது கண்டு போற்றி வியக்கப்
பாக்கள் புனைந்த அவனுக்குச்
சாரதியானாள் தமிழ் அன்னை !!
காலத்தை பாரதி வென்று விட்டான்!!

-விவேக்பாரதி
12.12.2013

Comments

Popular Posts