சக்தி புகழ்
வான வெளியிடை ஞானம் விளைந்திட
வாழும் ரவிச்சுடரே - உன்
ஞான ஒளியினை ஈந்த பராசக்தி
நல்லபேர் உரைத்திடுவாய் - இங்கு
நானும் பராசக்தி நற்புகழ் தனையே
நற்றமிழ்க் கவிதையிலே - பொருட்
தேனும் விளங்கிடப் பாட்டிசைக் கின்றேன்
தாயவள் நலமருள்வாள் !
முன்னம் இழைத்திட்ட பெரும்பிழை எல்லாம்
முள்ளிடை பட்டுவிட்ட - நனிச்
சின்னக் குமிழிகள் நொறுங்குதற் போலே
நித்தம் நொறுக்கிடுவாய் !- எம
தன்னை பராசக்தி உமதிரு பாதம்
அள்ளி அணைத்துக்கொண்டேன் - உன
தின்னருள் தருவாய் பூமியில் நானும்
இன்புற்று வாழுதற்கே !
மாதர் முகங்களைக், கூந்தல், நகங்களை
மாசுகம் என்றுவந்தேன் - அற்பக்
காதல் வளர்ந்ததும் கன்னிகளை என்
கருத்தினில் பாடிவந்தேன் - புவி
சேத மடைந்ததும் கவிதைக் கணைகளைப்
புரட்சியில் திருப்பிவிட்டேன் - உயர்
வேத மறிந்ததும் நாத வடிவமே
நின்னைச் சரண்புகுந்தேன் !
உலகம் சுழல்வது தன்னை மறக்கலாம்
உன்புகழ் மறந்திடுமோ ? - வண்ண
மலரும் தேனினை ஆக்க மறக்கும் நின்
மகிமை மறந்திடுமோ ? - பல
இலகு கவிதைகள் நானும் மறக்கலாம்
இன்னருள் அமுதினையே - வரும்
கலகம் நீங்கிடப் பாய்ச்சிய உனைஎன்
கவிதை மறந்திடுமோ ?
ஆதி சிவனுடை ஆறடி உடலினில்
அங்கே இடப்புறத்தில் - ஒரு
பாதி இடத்தினை வென்றாய் அதையும்
பாடி முரசறைய - நின்றன்
காதி னருகினில் உன்னரும் பிள்ளை
யானும் கவியுரைத்தேன் ! - முகச்
ஜோதி சுடரினை நித்தம் காட்டியே
சொர்க்கத்தில் ஏற்றிடுவாய் !
-விவேக்பாரதி
05.02.2015
வாழும் ரவிச்சுடரே - உன்
ஞான ஒளியினை ஈந்த பராசக்தி
நல்லபேர் உரைத்திடுவாய் - இங்கு
நானும் பராசக்தி நற்புகழ் தனையே
நற்றமிழ்க் கவிதையிலே - பொருட்
தேனும் விளங்கிடப் பாட்டிசைக் கின்றேன்
தாயவள் நலமருள்வாள் !
முன்னம் இழைத்திட்ட பெரும்பிழை எல்லாம்
முள்ளிடை பட்டுவிட்ட - நனிச்
சின்னக் குமிழிகள் நொறுங்குதற் போலே
நித்தம் நொறுக்கிடுவாய் !- எம
தன்னை பராசக்தி உமதிரு பாதம்
அள்ளி அணைத்துக்கொண்டேன் - உன
தின்னருள் தருவாய் பூமியில் நானும்
இன்புற்று வாழுதற்கே !
மாதர் முகங்களைக், கூந்தல், நகங்களை
மாசுகம் என்றுவந்தேன் - அற்பக்
காதல் வளர்ந்ததும் கன்னிகளை என்
கருத்தினில் பாடிவந்தேன் - புவி
சேத மடைந்ததும் கவிதைக் கணைகளைப்
புரட்சியில் திருப்பிவிட்டேன் - உயர்
வேத மறிந்ததும் நாத வடிவமே
நின்னைச் சரண்புகுந்தேன் !
உலகம் சுழல்வது தன்னை மறக்கலாம்
உன்புகழ் மறந்திடுமோ ? - வண்ண
மலரும் தேனினை ஆக்க மறக்கும் நின்
மகிமை மறந்திடுமோ ? - பல
இலகு கவிதைகள் நானும் மறக்கலாம்
இன்னருள் அமுதினையே - வரும்
கலகம் நீங்கிடப் பாய்ச்சிய உனைஎன்
கவிதை மறந்திடுமோ ?
ஆதி சிவனுடை ஆறடி உடலினில்
அங்கே இடப்புறத்தில் - ஒரு
பாதி இடத்தினை வென்றாய் அதையும்
பாடி முரசறைய - நின்றன்
காதி னருகினில் உன்னரும் பிள்ளை
யானும் கவியுரைத்தேன் ! - முகச்
ஜோதி சுடரினை நித்தம் காட்டியே
சொர்க்கத்தில் ஏற்றிடுவாய் !
-விவேக்பாரதி
05.02.2015
Comments
Post a Comment