கலைமகள் (எ) சாவோ ஜியாங்

கலைமகள் எ சாவோ ஜியாங்

சீனத்துச் செந்தமிழ்த் தேன் 
   சீரிடும் தமிழ் அமுதால்
வானத்தைக் கடந்து நின்று
   வாழ்கிறாள் பூமிக் குள்ளே !

அலைகடல் ஏழ் கடந்து
   அன்புத் தமிழ் பயின்று
கலைமகள் எனப் பெயரைக்
   கன்னித் தமிழாக்கிக் கொண்டாள் !

வானொலித் தமிழ்த் துறையில்
   பனி யாற்றிடும் பாவையவள்
மானோளிப் போல் விழியால்
   மங்காத் தமிழ் பேசிடுவாள் !

சீனம் முழுவதும் தமிழை
   சிறக்க வைக்கும் பெண்ணவளை
நான்எனை மறந்து நின்று
   நாவாரப் போற்றுகிறேன் !

(சீனப் பெண் சாவோ ஜியாங் என்பவர் தமிழகம் வந்து தமிழ் பயின்று நூல் எழுதிய செய்தி கேட்டு எழுதியது) 

-விவேக்பாரதி 
18.01.2014

Comments

Popular Posts