பிச்சை புகினும்

பிச்சை எடுப்பினும் நன்றாய் படித்துவிடில்
வையம் உனக்குக் கீழ் !

திருவோடு ஏந்திடினும் கற்க ! அதற்கே
கருவில் சுமந்தாள் உன்தாய் !

விதைத்திடு மனதில் படித்திடும் எண்ணத்தை
கையேந்தி நின்ற பின்னும் !

காசு உலகில் வேண்டிய தில்லை
மாசிலா கல்வி தேவை !

பேனா பிடிக்கும் கை இங்கு ஏன்
வீணாய் எடுக்குது பிச்சை !

-விவேக்பாரதி
24.11.2013

-

Comments

Popular Posts