உழைப்பாளர் தின வாழ்த்து
ஊரிலி ழைப்பவ ரின்றி - நாமும்
உண்டுமு டுத்தியும் வாழ்ந்திரு போமோ
பாரில வர்செய லன்றி - இங்கு
பாங்குடை தேசகங்கள் கண்டிட லாமோ ?
தாரிலு ருக்கிய சாலை - எங்கு
தாமிருந் தாற்றுவர் யாங்கனும் வேலை
நேரில வர்தமைக் கண்டால் - கையை
நேரேநி றுத்திவ ணங்குதல் வேண்டும் !
சாக்கடை அள்ளிடும் தோழர் - அந்த
சாகரம் போல்தொழில் நல்குகின் றாரே
ஆக்களை மெய்த்திடு வோரும் - அன்னை
அன்புடன் பூமிக்குப் பால்தரு கின்றார் !
காக்கும்நற் காவலர் இல்லை - என்றால்
கண்மூடி நித்திரை கொளலெளி தாமோ ?
வாக்குள வர்தமை வைத்து - என்றும்
வாழ்த்திட நாமுமே வாழ்ந்திட லாமே
சேற்றினில் கால்வைத்தி ருப்பார் - தாமும்
செய்திடும் வேளாண்மை யில்லையேல் இங்கு
சோற்றிலே கைவைக்க லாமோ ? - அந்தச்
சோதர ரில்லையேல் உண்டிடப் போமோ ?
ஆற்றுக்க ரைகளிற் சலவை - செய்யும்
ஆட்களு மில்லையேல் ஆடைக ளுண்டோ ?
போற்றுவோம் அன்னவர் தம்மை - செய்யின்
பொன்னுல கின்புற செய்யுவார் நாளும் !
கையிற்பி டித்திடும் கத்தி - சமையல்
கலையினி லுதவிடும் பாத்திரம் செய்ய
மெய்யினில் தீயிற்கி டப்பார் - அந்த
மேலானோ ரில்லையேல் ஆயுத முண்டோ
வெய்யில்த ணிந்திட சாறு - தந்து
வெம்மைத ணிப்பவர் வேந்தர்க ளன்றோ
தையல்தொ ழில்செயும் ஆட்கள் - இன்றி
தைரிய மாயுடை அணிந்திட லாமோ ?
வண்ணத்தில் வீடுகள் செய்வார் - அழகு
வாயில மைந்திட மரத்தையி ழைப்பார்
மண்ணில வர்செய லின்றி - வாழ்வை
மறைத்துநாற் சுவற்றினுள் நடத்திட லாமோ ?
உண்மை!உ ழைப்பவ ரெல்லாம் - தெய்வம்
உலகத்தி றங்கியே பணிசெயு தென்பேன் !
எண்ணத்த வர்தமை வைத்தால் - வையம்
ஏற்றத்தைக் கண்டிடும் என்றுமே வாழும் !
-விவேக்பாரதி
01.05.2016
உண்டுமு டுத்தியும் வாழ்ந்திரு போமோ
பாரில வர்செய லன்றி - இங்கு
பாங்குடை தேசகங்கள் கண்டிட லாமோ ?
தாரிலு ருக்கிய சாலை - எங்கு
தாமிருந் தாற்றுவர் யாங்கனும் வேலை
நேரில வர்தமைக் கண்டால் - கையை
நேரேநி றுத்திவ ணங்குதல் வேண்டும் !
சாக்கடை அள்ளிடும் தோழர் - அந்த
சாகரம் போல்தொழில் நல்குகின் றாரே
ஆக்களை மெய்த்திடு வோரும் - அன்னை
அன்புடன் பூமிக்குப் பால்தரு கின்றார் !
காக்கும்நற் காவலர் இல்லை - என்றால்
கண்மூடி நித்திரை கொளலெளி தாமோ ?
வாக்குள வர்தமை வைத்து - என்றும்
வாழ்த்திட நாமுமே வாழ்ந்திட லாமே
சேற்றினில் கால்வைத்தி ருப்பார் - தாமும்
செய்திடும் வேளாண்மை யில்லையேல் இங்கு
சோற்றிலே கைவைக்க லாமோ ? - அந்தச்
சோதர ரில்லையேல் உண்டிடப் போமோ ?
ஆற்றுக்க ரைகளிற் சலவை - செய்யும்
ஆட்களு மில்லையேல் ஆடைக ளுண்டோ ?
போற்றுவோம் அன்னவர் தம்மை - செய்யின்
பொன்னுல கின்புற செய்யுவார் நாளும் !
கையிற்பி டித்திடும் கத்தி - சமையல்
கலையினி லுதவிடும் பாத்திரம் செய்ய
மெய்யினில் தீயிற்கி டப்பார் - அந்த
மேலானோ ரில்லையேல் ஆயுத முண்டோ
வெய்யில்த ணிந்திட சாறு - தந்து
வெம்மைத ணிப்பவர் வேந்தர்க ளன்றோ
தையல்தொ ழில்செயும் ஆட்கள் - இன்றி
தைரிய மாயுடை அணிந்திட லாமோ ?
வண்ணத்தில் வீடுகள் செய்வார் - அழகு
வாயில மைந்திட மரத்தையி ழைப்பார்
மண்ணில வர்செய லின்றி - வாழ்வை
மறைத்துநாற் சுவற்றினுள் நடத்திட லாமோ ?
உண்மை!உ ழைப்பவ ரெல்லாம் - தெய்வம்
உலகத்தி றங்கியே பணிசெயு தென்பேன் !
எண்ணத்த வர்தமை வைத்தால் - வையம்
ஏற்றத்தைக் கண்டிடும் என்றுமே வாழும் !
-விவேக்பாரதி
01.05.2016
Comments
Post a Comment