கண்ணா சவுக்கியமா ?
கண்ணா கண்ணா சவுக்கியமா - உன்
கவிதைக் குழல்தான் சவுக்கியமா ?
பண்ணில் அமுதம் படைப்பவனே - பல
பாவைய ரோடு நடிப்பவனே !
பெண்கள் மனத்தில் வசிப்பவனே - பொய்ப்
பேடித் தனத்தை முடிப்பவனே
விண்ணோர் போற்றும் ஆயவனே ! - என்
விண்ணப் பங்கேள் மாயவனே
ஐந்து தலைகள் எனக்கில்லை - என்
ஐயனே என்றன் மேலாடு !
நைந்து போகும் துன்பங்களை - விரல்
நசுக்க லாலே நீபோக்கு !
கந்தல் இல்லை அவலில்லை - எனில்
கஷ்டம் உண்டடே என்கண்ணா !
வந்தணைத்துக் நீ காப்பாற்று - என்
வாட்டத்தைப் போக்கி நீ தேற்று !
வெண்ணெய் இல்லை பாலில்லை - மன
வேதனைகள் பலவுண்டு !
கண் குளத்தினில் நீருண்டு - மனக்
காட்டுக்குள்ளே போருண்டு !
உண்மை சொல்ல முடியாமல் - பொய்
உரக்கச் சொல்லத் தெரியாமல்
மண்ணில் வாழும் என்வாழ்வை - நீ
மாசில்லாமல் நேராக்கு !
என்ன நடனம் எழிற்கோலம் - உள்
எங்கும் உன்றன் முகஜாலம்
இன்னல் தீர்க்கும் உன்ரூபம் - எனக்
கின்பம் சேர்க்கும் பொன்ரூபம் !
மின்னல் போன்ற குழலாலே - இசை
மீட்டி வைப்பாய் மண்மேலே !
என்னை உன்றன் பதம்வைத்தேன் - இனி
ஏற்ப தென்பது உன்கடனே !
படம் : சுதன் காளிதாஸ்
-விவேக்பாரதி
17.05.2017
கவிதைக் குழல்தான் சவுக்கியமா ?
பண்ணில் அமுதம் படைப்பவனே - பல
பாவைய ரோடு நடிப்பவனே !
பெண்கள் மனத்தில் வசிப்பவனே - பொய்ப்
பேடித் தனத்தை முடிப்பவனே
விண்ணோர் போற்றும் ஆயவனே ! - என்
விண்ணப் பங்கேள் மாயவனே
ஐந்து தலைகள் எனக்கில்லை - என்
ஐயனே என்றன் மேலாடு !
நைந்து போகும் துன்பங்களை - விரல்
நசுக்க லாலே நீபோக்கு !
கந்தல் இல்லை அவலில்லை - எனில்
கஷ்டம் உண்டடே என்கண்ணா !
வந்தணைத்துக் நீ காப்பாற்று - என்
வாட்டத்தைப் போக்கி நீ தேற்று !
வெண்ணெய் இல்லை பாலில்லை - மன
வேதனைகள் பலவுண்டு !
கண் குளத்தினில் நீருண்டு - மனக்
காட்டுக்குள்ளே போருண்டு !
உண்மை சொல்ல முடியாமல் - பொய்
உரக்கச் சொல்லத் தெரியாமல்
மண்ணில் வாழும் என்வாழ்வை - நீ
மாசில்லாமல் நேராக்கு !
என்ன நடனம் எழிற்கோலம் - உள்
எங்கும் உன்றன் முகஜாலம்
இன்னல் தீர்க்கும் உன்ரூபம் - எனக்
கின்பம் சேர்க்கும் பொன்ரூபம் !
மின்னல் போன்ற குழலாலே - இசை
மீட்டி வைப்பாய் மண்மேலே !
என்னை உன்றன் பதம்வைத்தேன் - இனி
ஏற்ப தென்பது உன்கடனே !
படம் : சுதன் காளிதாஸ்
-விவேக்பாரதி
17.05.2017
Comments
Post a Comment