வயதும் மனதும்
தென்றல் வந்தென் நெஞ்சினைத் தீண்டும் !
தேடும் அலைகள் கால்களைத் தீண்டும் !
மன்ற நிலவு பார்வையைத் தீண்டும்
மலரின் வாசம் நாசியைத் தீண்டும்
அன்பி லிவையும் தீண்டிடும் போது
அடிமை நெஞ்சம் இதையறி யாது
கன்னி தீண்டிட ஏங்கிடும் வயது
கவிதை பாடித் திரிந்திடும் மனது !
அருகில் தெய்வம் வாவென அழைக்கும்
அறிவு ஞானம் அணைத்திடத் துடிக்கும் !
பெருகும் புகழும் பாசமும் உறவும்
பெயரும் பணமும் சுற்றிலும் நடிக்கும் !
உருகி இவைதான் நின்றிடும் போது
ஊமை நெஞ்சம் இதையுண ராது !
மருளு மிந்த மடமன மிங்கே
மங்கை தீண்டும் வரையினி லேங்கும் !
உண்மை அன்பைக் கண்டது மில்லை
உலகி லதனைக் கொண்டது மில்லை
கண்ணில் காணும் காட்சியி லெல்லாம்
காதல் தேடிக் கசிந்திடும் பிள்ளை !
பெண்ணின் மீதே மோகம் கொண்டு
பேருக் காணென் றலறிடும் கிள்ளை !
பண்ணில் சொல்லும் தன்னிலைச் சொல்லை
பாட லுக்கோர் பதிலுரை இல்லை !
-விவேக்பாரதி
16.05.2017
தேடும் அலைகள் கால்களைத் தீண்டும் !
மன்ற நிலவு பார்வையைத் தீண்டும்
மலரின் வாசம் நாசியைத் தீண்டும்
அன்பி லிவையும் தீண்டிடும் போது
அடிமை நெஞ்சம் இதையறி யாது
கன்னி தீண்டிட ஏங்கிடும் வயது
கவிதை பாடித் திரிந்திடும் மனது !
அருகில் தெய்வம் வாவென அழைக்கும்
அறிவு ஞானம் அணைத்திடத் துடிக்கும் !
பெருகும் புகழும் பாசமும் உறவும்
பெயரும் பணமும் சுற்றிலும் நடிக்கும் !
உருகி இவைதான் நின்றிடும் போது
ஊமை நெஞ்சம் இதையுண ராது !
மருளு மிந்த மடமன மிங்கே
மங்கை தீண்டும் வரையினி லேங்கும் !
உண்மை அன்பைக் கண்டது மில்லை
உலகி லதனைக் கொண்டது மில்லை
கண்ணில் காணும் காட்சியி லெல்லாம்
காதல் தேடிக் கசிந்திடும் பிள்ளை !
பெண்ணின் மீதே மோகம் கொண்டு
பேருக் காணென் றலறிடும் கிள்ளை !
பண்ணில் சொல்லும் தன்னிலைச் சொல்லை
பாட லுக்கோர் பதிலுரை இல்லை !
-விவேக்பாரதி