ஆறு அக்ஷரம்
ஆறு அக்ஷரம் - முருகன்
ஆறு அக்ஷரம்
ஊற னைத்தும் தீர்க்க வல்ல
ஆறு அக்ஷரம் !
ஆறு அக்ஷரம்
ஊற னைத்தும் தீர்க்க வல்ல
ஆறு அக்ஷரம் !
நெஞ்சி னுக்குள் வன்மம் மாயை
நேரில் மாய்க்கு மக்ஷரம்
அஞ்சல் கெஞ்சல் நீக்கி உள்ளில்
ஆண்மை நல்கு மக்ஷரம்
மஞ்சு வண்ண நாதன் மருகன்
மந்தி ரத்தி னக்ஷரம்
விஞ்சு கின்ற அருளை அள்ளி
வீசு கின்ற அக்ஷரம் !
சரவணபவ எனுமுரைசொல வருமெழிலது நாளும் !
சகலமுமுன தடிசரணென விழுவதுமெளி தாகும் !
பரகதிநிலை அதுதருமுய ரழகனினருள் நாமம் !
பரசிவமக னிருவிழிகளி லழிவுகளழி வெய்தும் !
கரமுடைவிர லதுவுயருற முருகனைநித மெண்ணக்,
கவலைகளறு மழகுகளுறு மிழிவுகளுட னோடும் !
சரவணபவ சரவணபவ சரவணபவ வேதம்
சடுதியிலுறும் மனமமைவுற இதுமொழிமட நெஞ்சே !
-விவேக்பாரதி
12.05.2017
நேரில் மாய்க்கு மக்ஷரம்
அஞ்சல் கெஞ்சல் நீக்கி உள்ளில்
ஆண்மை நல்கு மக்ஷரம்
மஞ்சு வண்ண நாதன் மருகன்
மந்தி ரத்தி னக்ஷரம்
விஞ்சு கின்ற அருளை அள்ளி
வீசு கின்ற அக்ஷரம் !
சரவணபவ எனுமுரைசொல வருமெழிலது நாளும் !
சகலமுமுன தடிசரணென விழுவதுமெளி தாகும் !
பரகதிநிலை அதுதருமுய ரழகனினருள் நாமம் !
பரசிவமக னிருவிழிகளி லழிவுகளழி வெய்தும் !
கரமுடைவிர லதுவுயருற முருகனைநித மெண்ணக்,
கவலைகளறு மழகுகளுறு மிழிவுகளுட னோடும் !
சரவணபவ சரவணபவ சரவணபவ வேதம்
சடுதியிலுறும் மனமமைவுற இதுமொழிமட நெஞ்சே !
-விவேக்பாரதி
12.05.2017
Comments
Post a Comment