ரமலான் வாழ்த்து
நீல விசும்பிடையே - மிக
நீளக் கிடக்கும் வெளியிடையே
கால மறிந்திடவே - அதோ
கடுகி வந்தது வான்பிறையே !
சீல முடையதுவாய்ப் - பல
ஜீவனைக் காத்திட வல்லதுவாய்
ஜாலங்கள் காட்டிடவே - பிறைச்
சந்திர னாயிறை தோன்றினனே !
நோன்பிருந்தார் உலகில் - அவர்
நோவை அகற்றியே நூதனமாய்
வான்வழி வந்தவனே - அருள்
வாரிச் சொரிந்திருள் மாய்த்திடுவாய் !
ஊன மகற்றிடுவாய் - வழி
உண்மையி லேயெமைக் கொண்டுசெல்வாய்
ஞான மளித்திடுவாய் - எழில்
ஞாலத்தைக் காக்கும் இறையருளே !
புனித ரமலானை - புவி
பூரிப் புடன்கொண் டாடிடவே
மனிதர் வர்க்கத்திலே - துயர்
மன்னும் மனத்தை அழித்திடுவாய் !
இனியொரு காதல்கொலை - வெறி
இனக்கொலை காணப் பொறுமையிலை
எனதரும் இறையவனே - கொதிப்
பேறிக் கிடக்குதெம் நெஞ்சகழி !
தீவினை ஓட்டிடுவாய் - நலம்
திக்கெட்டும் கொண்டுநீ சேர்த்திடுவாய்
ஆவினைக் காத்திடுவாய் - நிலை
அழகி இயற்கையைக் காத்திடுவாய் !
காவல் புரிந்தெமக்குப் - பழிக்
காட்டை எரிக்கும் கனல்கொடுப்பாய் !
நாவி லுனைப்புகழ்ந்தோம் - இறை
நபியரு ளேவந்து நலமருளே !
-விவேக்பாரதி
06.07.2016
நீளக் கிடக்கும் வெளியிடையே
கால மறிந்திடவே - அதோ
கடுகி வந்தது வான்பிறையே !
சீல முடையதுவாய்ப் - பல
ஜீவனைக் காத்திட வல்லதுவாய்
ஜாலங்கள் காட்டிடவே - பிறைச்
சந்திர னாயிறை தோன்றினனே !
நோன்பிருந்தார் உலகில் - அவர்
நோவை அகற்றியே நூதனமாய்
வான்வழி வந்தவனே - அருள்
வாரிச் சொரிந்திருள் மாய்த்திடுவாய் !
ஊன மகற்றிடுவாய் - வழி
உண்மையி லேயெமைக் கொண்டுசெல்வாய்
ஞான மளித்திடுவாய் - எழில்
ஞாலத்தைக் காக்கும் இறையருளே !
புனித ரமலானை - புவி
பூரிப் புடன்கொண் டாடிடவே
மனிதர் வர்க்கத்திலே - துயர்
மன்னும் மனத்தை அழித்திடுவாய் !
இனியொரு காதல்கொலை - வெறி
இனக்கொலை காணப் பொறுமையிலை
எனதரும் இறையவனே - கொதிப்
பேறிக் கிடக்குதெம் நெஞ்சகழி !
தீவினை ஓட்டிடுவாய் - நலம்
திக்கெட்டும் கொண்டுநீ சேர்த்திடுவாய்
ஆவினைக் காத்திடுவாய் - நிலை
அழகி இயற்கையைக் காத்திடுவாய் !
காவல் புரிந்தெமக்குப் - பழிக்
காட்டை எரிக்கும் கனல்கொடுப்பாய் !
நாவி லுனைப்புகழ்ந்தோம் - இறை
நபியரு ளேவந்து நலமருளே !
-விவேக்பாரதி
06.07.2016