காகிதக் காடு
காகித மெல்லாம் மரங்க ளான
காட்டை நான்கண்டேன் - என்
கனவினில் வந்த காகிதக் காட்டைக்
கவிதையில் சொல்கின்றேன் !
பேனா எல்லாம் மரத்தின் தண்டாய்ப்
பெருமை கொண்டிருக்கும் - அதில்
தேனாய் ஏந்திடும் காகித இலைகள்
தேசுடன் அசைந்திருக்கும் !
மானாய்க் கவிதை கதைகள் எல்லாம்
மாந்தும் பசிக்காக - அதைத்
தானாய் உண்ணும் அத்தகு காட்டின்
தன்மை வியப்பன்றோ !
அத்தகு காட்டில் அமைதி யாக
அழகாய் அமர்ந்திருந்தேன் - என்
சித்தம் எழுப்பும் சத்தத் துகளைச்
சிறப்பாய் எழுதவந்தேன்
அத்தனை இலையும் அசைந்து தவழ்ந்தே
அருகில் அழைத்தனவே - அதில்
முத்தம் பதித்துக் காகித இலையை
முழுவதும் வாழ்த்திவிட்டேன் !
"காகிதமே நீ நன்றாய் வாழ்க
காசினி உனைப்புகழ்க ! - உன்
வாகுடை அழகைக் கண்டிவ் வுலகம்
வாழ்த்து வழங்கிடட்டும்
மோகத்தால் இன்று உனைமறந் தாலும்
மொத்த உலகமுமே - உனை
வேகத் துடனே மதிக்கும் நல்ல
வேளை தூரமில்லை"
-விவேக்பாரதி
12.06.2017
காட்டை நான்கண்டேன் - என்
கனவினில் வந்த காகிதக் காட்டைக்
கவிதையில் சொல்கின்றேன் !
பேனா எல்லாம் மரத்தின் தண்டாய்ப்
பெருமை கொண்டிருக்கும் - அதில்
தேனாய் ஏந்திடும் காகித இலைகள்
தேசுடன் அசைந்திருக்கும் !
மானாய்க் கவிதை கதைகள் எல்லாம்
மாந்தும் பசிக்காக - அதைத்
தானாய் உண்ணும் அத்தகு காட்டின்
தன்மை வியப்பன்றோ !
அத்தகு காட்டில் அமைதி யாக
அழகாய் அமர்ந்திருந்தேன் - என்
சித்தம் எழுப்பும் சத்தத் துகளைச்
சிறப்பாய் எழுதவந்தேன்
அத்தனை இலையும் அசைந்து தவழ்ந்தே
அருகில் அழைத்தனவே - அதில்
முத்தம் பதித்துக் காகித இலையை
முழுவதும் வாழ்த்திவிட்டேன் !
"காகிதமே நீ நன்றாய் வாழ்க
காசினி உனைப்புகழ்க ! - உன்
வாகுடை அழகைக் கண்டிவ் வுலகம்
வாழ்த்து வழங்கிடட்டும்
மோகத்தால் இன்று உனைமறந் தாலும்
மொத்த உலகமுமே - உனை
வேகத் துடனே மதிக்கும் நல்ல
வேளை தூரமில்லை"
-விவேக்பாரதி
12.06.2017
Comments
Post a Comment