கீற்றே !!
சின்னஞ் சிறுகீற்றே - நீயோர்
சேதி கேளாயோ ?
உன்னைத் தோற்கடிப்பாள் - அவள்
உருவம் காணாயோ ?
மென்மை நடையழகி - எழில்
மேவும் இடையழகி
தன்னந் தனிமையிலே - எனைத்
தழுவிடுவாள் குலவி !
பச்சைப் பசுமுடல்தான் - கொண்ட
பருவம் இளையதுதான்
இச்சைக் கினியவள்தான் - காண
இன்பம் கொடுப்பவள்தான் !
உச்சந் தலைவகுட்டில் - இடை
உன்னதக் கோலத்திலும்
மெச்சற் குரியவளாம் - என
மேலவர் வாழ்த்திடுவார் !!
காற்றில் அசைபவள் நீ - என்
கவியின் அசைவவள்காண் !
சேற்றில் வளர்பவள் நீ -அவள்
சேர்வதென் நெஞ்சகமாம் !
ஆற்றல் உடையவளாய்க் - கண்
அழகில் கிழிப்பவளாய்த்
தோற்றம் கொடுத்திடுவாள் - முனம்
தோற்பும் அழகல்லவோ ??
-விவேக்பாரதி
07.07.2017
சேதி கேளாயோ ?
உன்னைத் தோற்கடிப்பாள் - அவள்
உருவம் காணாயோ ?
மென்மை நடையழகி - எழில்
மேவும் இடையழகி
தன்னந் தனிமையிலே - எனைத்
தழுவிடுவாள் குலவி !
பச்சைப் பசுமுடல்தான் - கொண்ட
பருவம் இளையதுதான்
இச்சைக் கினியவள்தான் - காண
இன்பம் கொடுப்பவள்தான் !
உச்சந் தலைவகுட்டில் - இடை
உன்னதக் கோலத்திலும்
மெச்சற் குரியவளாம் - என
மேலவர் வாழ்த்திடுவார் !!
காற்றில் அசைபவள் நீ - என்
கவியின் அசைவவள்காண் !
சேற்றில் வளர்பவள் நீ -அவள்
சேர்வதென் நெஞ்சகமாம் !
ஆற்றல் உடையவளாய்க் - கண்
அழகில் கிழிப்பவளாய்த்
தோற்றம் கொடுத்திடுவாள் - முனம்
தோற்பும் அழகல்லவோ ??
-விவேக்பாரதி
07.07.2017
Comments
Post a Comment