சக்தி ஊர்தி
பாடலில் கூத்தாடுவாள் - சக்தி
பவனிவந் தென்னுளே ஆர்த்தாடுவாள் !
வாடிடா மலர்க்கூந்தலாள் - சொல்லும்
வார்த்தைக்கு ளேவந்து பூத்தாடுவாள் !
ஆடலைக் கண்டகண்கள் - அண்ட
மாயிரங் கண்டதாய்ப் பாட்டிசைக்கும்
பாடுமென் நாவினுக்குள் - அந்த
பரசக்தி நின்றென்னை ஆட்டுகின்றாள் !
மின்னலின் ஒளியானவள் - கண்ணில்
மின்னிடும் இன்னொரு ரவியானவள்
கன்னலின் சுவையானவள் - காளி
கவிதையின் வடிவிலே கனியானவள்
இன்னலில் சுடரானவள் - நெஞ்ச
எந்திரத் தில்படரும் கொடியானவள்
என்னென்ன செய்திடினும் - என்னை
ஏற்றும் விசையென்று வருவாளவள் !
காற்றினிற் பேசுகின்றாள் - அன்னை
காவிய மாயென்றன் எண்ணத்திலே
ஊற்றெழுந் தோடுகின்றாள் - சொல்லின்
ஊர்தியில் உலகெலாங் காணுகின்றாள் !
ஆற்றல் அளித்துநின்றாள் - வாழ்க
ஆதிபரா சக்தியெனும் கோஷத்திலே
வீற்றிருந் தோட்டுகின்றாள் - அந்த
விசையிலே நாடொறும் பாடுகின்றேன் !
- விவேக்பாரதி
17.05.2017
பவனிவந் தென்னுளே ஆர்த்தாடுவாள் !
வாடிடா மலர்க்கூந்தலாள் - சொல்லும்
வார்த்தைக்கு ளேவந்து பூத்தாடுவாள் !
ஆடலைக் கண்டகண்கள் - அண்ட
மாயிரங் கண்டதாய்ப் பாட்டிசைக்கும்
பாடுமென் நாவினுக்குள் - அந்த
பரசக்தி நின்றென்னை ஆட்டுகின்றாள் !
மின்னலின் ஒளியானவள் - கண்ணில்
மின்னிடும் இன்னொரு ரவியானவள்
கன்னலின் சுவையானவள் - காளி
கவிதையின் வடிவிலே கனியானவள்
இன்னலில் சுடரானவள் - நெஞ்ச
எந்திரத் தில்படரும் கொடியானவள்
என்னென்ன செய்திடினும் - என்னை
ஏற்றும் விசையென்று வருவாளவள் !
காற்றினிற் பேசுகின்றாள் - அன்னை
காவிய மாயென்றன் எண்ணத்திலே
ஊற்றெழுந் தோடுகின்றாள் - சொல்லின்
ஊர்தியில் உலகெலாங் காணுகின்றாள் !
ஆற்றல் அளித்துநின்றாள் - வாழ்க
ஆதிபரா சக்தியெனும் கோஷத்திலே
வீற்றிருந் தோட்டுகின்றாள் - அந்த
விசையிலே நாடொறும் பாடுகின்றேன் !
- விவேக்பாரதி
17.05.2017