மாணிக்கக் கூடை
பல்லவி :
கூடையி லேயொரு மாணிக்கத்தைக்
கூட்டிக் கொண்டு செல்லுகிறேன்
கூட வாருங்கள் - உயிர்களே
கூடி வாருங்கள் !
வாடையி லேகரும் வேளையிலே இந்த
வானைப் பிளக்கும் மழையினிலே
வாழ்த்த வாருங்கள் - கண்ணன்முக
வண்ணம் காணுங்கள் !
ஆலால நிறங்கொண்டான்
ஆண்டவனின் உருகொண்டான்
நாலாயிர நாயகனும்
நமக்கருள வந்துதித்தான் !
பட்சிகளே வாருங்கள்
பாட்டெழுதித் தாருங்கள்
உச்சிதொடும் தென்றலிலே
உரையெழுதிப் போடுங்கள் ! (கூடையிலே...)
வாசுதேவன் நடக்கையிலே
வான்பிளந்து சிரிக்கையிலே
வாசுகியின் குடையினிலே
வண்ணமோடு துஞ்சுகின்றான் !
நந்தகோபன் வீட்டினிலே
நாளுமொரு சேட்டையெனத்
தொந்தரவு செய்துவந்தால்
தொல்லையெனக் கருதாதீர் !! (கூடையிலே...)
பாடல் : https://soundcloud.com/vivekbharathi/maanikakoodai
-விவேக்பாரதி
25.08.2016
கூடையி லேயொரு மாணிக்கத்தைக்
கூட்டிக் கொண்டு செல்லுகிறேன்
கூட வாருங்கள் - உயிர்களே
கூடி வாருங்கள் !
வாடையி லேகரும் வேளையிலே இந்த
வானைப் பிளக்கும் மழையினிலே
வாழ்த்த வாருங்கள் - கண்ணன்முக
வண்ணம் காணுங்கள் !
ஆலால நிறங்கொண்டான்
ஆண்டவனின் உருகொண்டான்
நாலாயிர நாயகனும்
நமக்கருள வந்துதித்தான் !
பட்சிகளே வாருங்கள்
பாட்டெழுதித் தாருங்கள்
உச்சிதொடும் தென்றலிலே
உரையெழுதிப் போடுங்கள் ! (கூடையிலே...)
வாசுதேவன் நடக்கையிலே
வான்பிளந்து சிரிக்கையிலே
வாசுகியின் குடையினிலே
வண்ணமோடு துஞ்சுகின்றான் !
நந்தகோபன் வீட்டினிலே
நாளுமொரு சேட்டையெனத்
தொந்தரவு செய்துவந்தால்
தொல்லையெனக் கருதாதீர் !! (கூடையிலே...)
பாடல் : https://soundcloud.com/vivekbharathi/maanikakoodai
-விவேக்பாரதி
25.08.2016