எழில் முனை வேல் !!

சுதன் அண்ணனின் இப்படத்திற்கு எழுதியது
உருகா மனமும் உருகும் - மெய்
உணரா அறிவும் உணரும்
மெருகா உயிரும் மெருகும் - உனை
மெச்சாக் நெஞ்சும் மெச்சும் !
பெருகா விழியும் பெருகும் - நிதம்
பெருமா பிழைகள் உருகும்
முருகா முருகா முருகா - எழில்
முனைவேல் குமரா சரணம் !
அயிலில் வினைகள் அழியும் - உன்
அழகில் அமுதம் வழியும்
மயிலும் துணையாய்த் தொடரும் - எம்
மதியில் நலமே படரும்
கயிலை பதியின் மகனே - உன்
கடைகண் எமக்கு வரமே
ஒயிலா அழகா முருகா - உன்
ஒருபேர் மொழிதல் தவமே!!
-விவேக்பாரதி
17.01.2017