சக்தி நடம்
நடமிடு நங்கை வடிவினி லன்னை
நம்முன் வருகின்றாள் ! - பல
நன்மை தருகின்றாள் ! - அவள்
கடிகமழ் பாதம் இடும்நடம் கண்டால்
கவிதைகள் வாராதோ ? - உள்ள
கவலைகள் தீராதோ ?
தோகைம யூரம் வாகுடன் சிலிர்க்கத்
தோன்றி நடிக்கின்றாள் - அம்மை
தொல்லை முடிக்கின்றாள் ! - பெரும்
வேகமெ டுத்தே மோகன மாக
வெல்ல நடிக்கின்றாள் - மழையாய்
வேர்வை வடிக்கின்றாள் !
குங்கும ஜோதி எங்கும்ப ரப்பிக்
கொண்டை குலுங்கிடவே - அவள்
கூத்திடு கின்றாளே ! - எழில்
தங்கம ணிப்பூப் பங்கயம் மீதில்
தமிழ்நட மிடுகின்றாள் ! - இந்தத்
தளிர்மனத் துரைகின்றாள்
எங்கணும் வெற்றி பொங்கிடு மாறே
எங்கள் தவத்தாய்தான் - இங்கே
எழில்நட மிடுகின்றாள் ! - ஓ !
மங்கலம் அடடா மங்கலக் காட்சி
மண்ணில் உயிர்க்குதம்மா - கண்டார்
மனங்கள் சிலிர்க்குதம்மா !
ஒருபதம் தூக்கி ஒருகையு யர்த்தி
ஓங்கி நடிக்கின்றாள் - மனத்தைப்
ஒன்றிப் பிடிக்கின்றாள் ! - அவள்
திருவுருக் காட்சி தருவதற் கன்றோ
திவ்ய ஸ்வரூபினியாய்த் - தெய்வத்
தரிசனம் தருகின்றாள் !
படம் : சுதன் காளிதாஸ்
-விவேக்பாரதி
18.05.2017
நம்முன் வருகின்றாள் ! - பல
நன்மை தருகின்றாள் ! - அவள்
கடிகமழ் பாதம் இடும்நடம் கண்டால்
கவிதைகள் வாராதோ ? - உள்ள
கவலைகள் தீராதோ ?
தோகைம யூரம் வாகுடன் சிலிர்க்கத்
தோன்றி நடிக்கின்றாள் - அம்மை
தொல்லை முடிக்கின்றாள் ! - பெரும்
வேகமெ டுத்தே மோகன மாக
வெல்ல நடிக்கின்றாள் - மழையாய்
வேர்வை வடிக்கின்றாள் !
குங்கும ஜோதி எங்கும்ப ரப்பிக்
கொண்டை குலுங்கிடவே - அவள்
கூத்திடு கின்றாளே ! - எழில்
தங்கம ணிப்பூப் பங்கயம் மீதில்
தமிழ்நட மிடுகின்றாள் ! - இந்தத்
தளிர்மனத் துரைகின்றாள்
எங்கணும் வெற்றி பொங்கிடு மாறே
எங்கள் தவத்தாய்தான் - இங்கே
எழில்நட மிடுகின்றாள் ! - ஓ !
மங்கலம் அடடா மங்கலக் காட்சி
மண்ணில் உயிர்க்குதம்மா - கண்டார்
மனங்கள் சிலிர்க்குதம்மா !
ஒருபதம் தூக்கி ஒருகையு யர்த்தி
ஓங்கி நடிக்கின்றாள் - மனத்தைப்
ஒன்றிப் பிடிக்கின்றாள் ! - அவள்
திருவுருக் காட்சி தருவதற் கன்றோ
திவ்ய ஸ்வரூபினியாய்த் - தெய்வத்
தரிசனம் தருகின்றாள் !
படம் : சுதன் காளிதாஸ்
-விவேக்பாரதி
18.05.2017
Comments
Post a Comment