வார்குழல்
வார்குழல் - மட்டு வார்குழல்
வணங்கும் மனமெங்கும் ஆர்கழல் !
சீரிவள் - மழைக் காரிவள்
சீறிடும் வீரத்தின் பேரிவள் !
நேசத் தோடொரு பாசத்தின் பாவம்
நெஞ்சிடைக் காட்டிடும் நேர்த்தியினாள் !
நேரில் தாக்கிடும் தீமையின் கோர
நெறிதனை மாய்த்திடும் சேர்க்கையினாள் !
வீசும் காற்றினில் விரிந்திடும் பூவாய்
விந்தையின் தோற்றம் காட்டிடுவாள்
வித்யை நல்கிடும் விசித்திர மாவாள்
வீணையென் றேயெனை மீட்டிடுவாள் !
காலைச் சுடரெனக் கண்களில் நிற்பாள் !
கவிதையில் கனலாய்ப் பூத்திருப்பாள்
கன்னி உருவினில் காட்சிக்கு வருவாள்
காட்டினில் ஒளியாய்த் துணைபுரிவாள் !
ஜ்வாலை உருவெனத் திரியினில் வளர்வாள் !
சாற்றிடும் மறையில் விளங்கிடுவாள் !
சாகும் உடலுயிர் மனத்தினைத் தாளில்
சார்த்திட நம்மைக் காத்தருள்வாள் !
-விவேக்பாரதி
22.05.2017
சீறிடும் வீரத்தின் பேரிவள் !
நேசத் தோடொரு பாசத்தின் பாவம்
நெஞ்சிடைக் காட்டிடும் நேர்த்தியினாள் !
நேரில் தாக்கிடும் தீமையின் கோர
நெறிதனை மாய்த்திடும் சேர்க்கையினாள் !
வீசும் காற்றினில் விரிந்திடும் பூவாய்
விந்தையின் தோற்றம் காட்டிடுவாள்
வித்யை நல்கிடும் விசித்திர மாவாள்
வீணையென் றேயெனை மீட்டிடுவாள் !
காலைச் சுடரெனக் கண்களில் நிற்பாள் !
கவிதையில் கனலாய்ப் பூத்திருப்பாள்
கன்னி உருவினில் காட்சிக்கு வருவாள்
காட்டினில் ஒளியாய்த் துணைபுரிவாள் !
ஜ்வாலை உருவெனத் திரியினில் வளர்வாள் !
சாற்றிடும் மறையில் விளங்கிடுவாள் !
சாகும் உடலுயிர் மனத்தினைத் தாளில்
சார்த்திட நம்மைக் காத்தருள்வாள் !
-விவேக்பாரதி
22.05.2017