அறிவென்று

ஒருகுடத்தே விளக்கொன்றை ஏற்றி வைத்தால்
   ஒருபயனும் வாராதே ! அவ்வி ளக்கைப்
பெரிதான குன்றத்தில் ஏற்றி வைத்தால்
   பேயிருட்டை அதுநீக்கும் ! உலக மீதில்
ஒருசாரார்க் குதவுகின்ற வழியில் மட்டும்
   ஓங்கிடுதல் அறிவன்று ! மக்க ளுக்குச்
சரியான முறையினிலே சேரு மொன்றே !
   சகமக்கள் அறிவென்று மெச்சு வாரே !

-விவேக்பாரதி
05.04.2017

Comments

Popular Posts