எங்கே அது ??
கண்ணாடி பார்த்தேன் !
கவிதையை வார்த்தேன் !
எங்கே அது ??
எனக்கு முன்பொரு கண்ணாடி - அதில்
என்னை நானிங்கு காணுகிறேன் !
வனப்பு நிறைந்தவென் திருமுகமும் - நல்ல
வலுவை ஏந்திடும் இருபுயமும்
கனிந்த காட்சியைக் காணுகிறேன் - எனில்
கவலைக் குறுவதைக் காணவில்லை !
மனமே ! நீயெங்கு போனாயோ ? - உனை
மனிதர் பார்த்திட வழியிலையோ ?
நில்லா தெங்கணும் உழல்வதுநீ ! - ஒரு
நித்ய அமைதியில் சுழல்வதுநீ !
சொல்லைக் கேட்காமல் திரிவதுநீ - மெய்ச்
சோதி உணர்ந்ததும் எரிவதுநீ !
பொல்லாச் செயல்கள் விழைவதுநீ - உயர்
போதம் கண்டதும் கலைவதுநீ
இல்லா உருவமே பொய்மனமே - நீ
இருக்கும் இடமெது ? சொல்மனமே !
நானும் என்செயலும் ஒன்றிவிட்டால் - அட
நடுவில் நீயெங்கோ சென்றிடுவாய் !
நானும் செய்கையும் வேறாகின் - உடன்
நடிக்க நீயுளே நின்றிடுவாய் !
மேனி நடத்திடும் விசையெனவே - பொய்
மீது புரண்டிடும் சிறுமனமே !
நானிங் கென்னுரு காணுகிறேன் - அதில்
நடத்தும் பொருளெங்கு போயினையோ ?
-விவேக்பாரதி
27.03.2017
கவிதையை வார்த்தேன் !
எங்கே அது ??
எனக்கு முன்பொரு கண்ணாடி - அதில்
என்னை நானிங்கு காணுகிறேன் !
வனப்பு நிறைந்தவென் திருமுகமும் - நல்ல
வலுவை ஏந்திடும் இருபுயமும்
கனிந்த காட்சியைக் காணுகிறேன் - எனில்
கவலைக் குறுவதைக் காணவில்லை !
மனமே ! நீயெங்கு போனாயோ ? - உனை
மனிதர் பார்த்திட வழியிலையோ ?
நில்லா தெங்கணும் உழல்வதுநீ ! - ஒரு
நித்ய அமைதியில் சுழல்வதுநீ !
சொல்லைக் கேட்காமல் திரிவதுநீ - மெய்ச்
சோதி உணர்ந்ததும் எரிவதுநீ !
பொல்லாச் செயல்கள் விழைவதுநீ - உயர்
போதம் கண்டதும் கலைவதுநீ
இல்லா உருவமே பொய்மனமே - நீ
இருக்கும் இடமெது ? சொல்மனமே !
நானும் என்செயலும் ஒன்றிவிட்டால் - அட
நடுவில் நீயெங்கோ சென்றிடுவாய் !
நானும் செய்கையும் வேறாகின் - உடன்
நடிக்க நீயுளே நின்றிடுவாய் !
மேனி நடத்திடும் விசையெனவே - பொய்
மீது புரண்டிடும் சிறுமனமே !
நானிங் கென்னுரு காணுகிறேன் - அதில்
நடத்தும் பொருளெங்கு போயினையோ ?
-விவேக்பாரதி
27.03.2017