புகைக்குப் பூட்டு
உதட்டில் வைத்தே உரிஞ்சுகிறாய்ப் ! புகை
உயிரை உரியும் அறிவாயா ?
இதமே இதுவென்று இயம்புகிறாய் !உன்
இதயம் பொசுக்கும் அறிவாயா ?
நீயும் மாய்வாய் உன்னைச் சுற்றி
நிகழும் அனைத்தும் மாண்டுவிடும்!
தீயும் பரவித் திக்கை நிரப்பத்
தீதே உலகை ஆண்டுவிடும் !
நஞ்சின் குவியல் தன்னை உனக்கு
நயமாய்த் தந்தால் ஏற்பாயா ?
வஞ்சப் புகையும் நஞ்சின் குவியல்!
வன்மை இன்றித் தோற்பாயா ?
புகைக்கும் பழக்கம் தன்னை விட்டுப்
புண்ணியம் தன்னை நாட்டிவிடு!
புகைத்துக் கிடக்கும் வாயைக் கண்டால்
பூட்டை அங்கே போட்டுவிடு !!
-விவேக்பாரதி
31.05.2016
உயிரை உரியும் அறிவாயா ?
இதமே இதுவென்று இயம்புகிறாய் !உன்
இதயம் பொசுக்கும் அறிவாயா ?
நீயும் மாய்வாய் உன்னைச் சுற்றி
நிகழும் அனைத்தும் மாண்டுவிடும்!
தீயும் பரவித் திக்கை நிரப்பத்
தீதே உலகை ஆண்டுவிடும் !
நஞ்சின் குவியல் தன்னை உனக்கு
நயமாய்த் தந்தால் ஏற்பாயா ?
வஞ்சப் புகையும் நஞ்சின் குவியல்!
வன்மை இன்றித் தோற்பாயா ?
புகைக்கும் பழக்கம் தன்னை விட்டுப்
புண்ணியம் தன்னை நாட்டிவிடு!
புகைத்துக் கிடக்கும் வாயைக் கண்டால்
பூட்டை அங்கே போட்டுவிடு !!
-விவேக்பாரதி
31.05.2016