என்னென்ன செய்வீர் ?
(நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவனின் புலம்பல் !
)
என்னென்ன செய்வீரோ ? - இன்னும்
என்னென்ன செய்வீரோ ?
முன்னம் படித்தது முற்றும் மறந்திட
மூலைக்கு மூலையோர் சோதனையாய்
என்னைப் படுத்தியென் எண்ணம் குழப்பிட
என்னென்ன இங்ஙணம் செய்யுவிரோ ?
மருத்துவ மென்னும் மாண்புடைச் சேவையை
மண்ணில் பயின்றிட வந்ததுதான்
பெருந்தவ றோவெனை இப்படிச் சோதித்து
பெற்றது மென்னெனச் சொல்லுவிரோ ?
சட்டை கிழித்தனர் சாற்றிடும் எம்மதச்
சின்னங்களை இங்கு நீக்கிவிட்டார் !
பிட்டடிப் போமெனும் எண்ணத்தி னாலிந்தப்
பிள்ளையைக் கைதிபோல் காணுகிறார் !
கோடி யடித்தவன் கொள்ளைகள் செய்தவன்
கோட்டையில் நாட்டினில் சுற்றிடவே !
பாடம் படித்திடும் பாலரைக் குற்றங்கள்
பன்னிடு வோரென எண்ணுகிறார் !
நாட்டின் வசந்தத்தை எங்களின் கைகளில்
நல்விதங் கண்டவர் காதுகளில்
கேட்டி னிடைப்படும் எங்களின் கூக்குரல்
கேட்பற் கிங்கு வழியிலையோ ?
மாணவர் தானைய ! நாங்களும் நாட்டினை
மாய்த்திட வந்தவ ரில்லையென்றே
ஆணவத் தோடுரை செய்யத் துணிவுண்டு
ஆயினும் நாங்களச் சாதியில்லை !
முற்பகல் செய்திடின் பிற்பகல் நின்றிடும் !
மூத்தவர் வார்த்தைகள் பொய்த்திடுமோ ?
நிற்கவைத் தீரும்மை வாழவைப்போம் ! உயிர்
நீட்சியைச் செய்யும் மருத்துவர்யாம் !
-விவேக்பாரதி
09.05.2017
என்னென்ன செய்வீரோ ? - இன்னும்
என்னென்ன செய்வீரோ ?
முன்னம் படித்தது முற்றும் மறந்திட
மூலைக்கு மூலையோர் சோதனையாய்
என்னைப் படுத்தியென் எண்ணம் குழப்பிட
என்னென்ன இங்ஙணம் செய்யுவிரோ ?
மருத்துவ மென்னும் மாண்புடைச் சேவையை
மண்ணில் பயின்றிட வந்ததுதான்
பெருந்தவ றோவெனை இப்படிச் சோதித்து
பெற்றது மென்னெனச் சொல்லுவிரோ ?
சட்டை கிழித்தனர் சாற்றிடும் எம்மதச்
சின்னங்களை இங்கு நீக்கிவிட்டார் !
பிட்டடிப் போமெனும் எண்ணத்தி னாலிந்தப்
பிள்ளையைக் கைதிபோல் காணுகிறார் !
கோடி யடித்தவன் கொள்ளைகள் செய்தவன்
கோட்டையில் நாட்டினில் சுற்றிடவே !
பாடம் படித்திடும் பாலரைக் குற்றங்கள்
பன்னிடு வோரென எண்ணுகிறார் !
நாட்டின் வசந்தத்தை எங்களின் கைகளில்
நல்விதங் கண்டவர் காதுகளில்
கேட்டி னிடைப்படும் எங்களின் கூக்குரல்
கேட்பற் கிங்கு வழியிலையோ ?
மாணவர் தானைய ! நாங்களும் நாட்டினை
மாய்த்திட வந்தவ ரில்லையென்றே
ஆணவத் தோடுரை செய்யத் துணிவுண்டு
ஆயினும் நாங்களச் சாதியில்லை !
முற்பகல் செய்திடின் பிற்பகல் நின்றிடும் !
மூத்தவர் வார்த்தைகள் பொய்த்திடுமோ ?
நிற்கவைத் தீரும்மை வாழவைப்போம் ! உயிர்
நீட்சியைச் செய்யும் மருத்துவர்யாம் !
-விவேக்பாரதி
09.05.2017