ஜென் சிந்தனை
ஜென்துறவி ஒருவரிடம் சீடர் கேட்டார்
" சேர்கின்ற மனத்தீமை அழிப்ப தற்கே
என்னவழி சொல்லிடுக " வென்றார் ! அங்கே
ஏற்றமிகும் துறவியுமே சம்ம தித்து
முன்னமொரு பானைதனைக் கொணரீ ரென்றார்
முந்தியவர் பானைகளைக் கொணர்ந்த பின்னர்
என்னயிதற் குள்ளிருப்ப தென்று கேட்டார்
எல்லாரும் ஒன்றுமிலை என்று சொன்னார் !
கூட்டத்துள் ஒருசீடன் மட்டும் வந்து
"குணமுடைய! இதற்குள்ளே காற்றுண்" டென்றான்
ஊட்டமுடன் பிறர்பின்னால் ஆமாம் என்றார் !
உயர்ஞானம் கொண்டவரோ மேலும் சொல்வார் !
"மீட்டிதற்குள் இருகின்ற காற்றை யிங்கே
வெளியேற்றக் கூடிடுமோ?" வென்று கேட்டார்
கூட்டத்தில் உள்ளவர்கள் முடியா தென்றார்
குறைவில்லா வொருசீடன் முடியு மென்றான் !
"என்செய்வாய் ? செய்"யென்றார் சீடன் வந்தான்
எடுத்துவந்த நீர்தன்னை உள்ளே விட்டு
"முன்னிருந்த காற்றங்கே இப்போ தில்லை
முற்றிலுமே தண்ணீர்தான்" என்று சொன்னான் !
ஜென்துறவி இதுகண்டார் ! "இதுதான் சேதி !
சேருமனத் தீமைதனை மாய்ப்ப தற்கு
நன்மைதனை உள்செலுத்த வேண்டும்" என்றார்
நலம்பெற்றார் ! உலகத்தோர் பயன்பெற் றாரே !
-விவேக்பாரதி
16.03.2017
" சேர்கின்ற மனத்தீமை அழிப்ப தற்கே
என்னவழி சொல்லிடுக " வென்றார் ! அங்கே
ஏற்றமிகும் துறவியுமே சம்ம தித்து
முன்னமொரு பானைதனைக் கொணரீ ரென்றார்
முந்தியவர் பானைகளைக் கொணர்ந்த பின்னர்
என்னயிதற் குள்ளிருப்ப தென்று கேட்டார்
எல்லாரும் ஒன்றுமிலை என்று சொன்னார் !
கூட்டத்துள் ஒருசீடன் மட்டும் வந்து
"குணமுடைய! இதற்குள்ளே காற்றுண்" டென்றான்
ஊட்டமுடன் பிறர்பின்னால் ஆமாம் என்றார் !
உயர்ஞானம் கொண்டவரோ மேலும் சொல்வார் !
"மீட்டிதற்குள் இருகின்ற காற்றை யிங்கே
வெளியேற்றக் கூடிடுமோ?" வென்று கேட்டார்
கூட்டத்தில் உள்ளவர்கள் முடியா தென்றார்
குறைவில்லா வொருசீடன் முடியு மென்றான் !
"என்செய்வாய் ? செய்"யென்றார் சீடன் வந்தான்
எடுத்துவந்த நீர்தன்னை உள்ளே விட்டு
"முன்னிருந்த காற்றங்கே இப்போ தில்லை
முற்றிலுமே தண்ணீர்தான்" என்று சொன்னான் !
ஜென்துறவி இதுகண்டார் ! "இதுதான் சேதி !
சேருமனத் தீமைதனை மாய்ப்ப தற்கு
நன்மைதனை உள்செலுத்த வேண்டும்" என்றார்
நலம்பெற்றார் ! உலகத்தோர் பயன்பெற் றாரே !
-விவேக்பாரதி
16.03.2017