வான வாழ்த்து
பேயென்று மழைவந்து வெளிநின்று பாடும்
பேரின்பம் அலையாக நெஞ்சத்தில் மோதும்
தாயின்று வரம்தந்த திடியென்னும் நாதம்
தாராள மாய்மண்ணும் மழைதன்னைச் சூடும் !
தீயென்னும் வெயில்மாய வரும்மின்னல் பாயும்
தீம்நம்தம் எனத்தென்றல் மழையோடு ஆடும் !
வாவென்று பலர்கேட்ட மழைவந்த நேரம்
வாழ்த்தாமல் தணியாது நெஞ்சத்தின் பாரம் !
*
பேரின்பம் அலையாக நெஞ்சத்தில் மோதும்
தாயின்று வரம்தந்த திடியென்னும் நாதம்
தாராள மாய்மண்ணும் மழைதன்னைச் சூடும் !
தீயென்னும் வெயில்மாய வரும்மின்னல் பாயும்
தீம்நம்தம் எனத்தென்றல் மழையோடு ஆடும் !
வாவென்று பலர்கேட்ட மழைவந்த நேரம்
வாழ்த்தாமல் தணியாது நெஞ்சத்தின் பாரம் !
*
வானம் வந்து தூறல் தந்து
வாழ்த்தும் இன்ப நேரம்
வாக்குள் சந்தம் பூக்கும் ! நெஞ்சம்
வாட்டம் நீங்கி ஆடும் !
ஈனம் என்னும் வெய்யில் நீங்க
இடியின் நாதம் கீதம் !
இங்கே வீசும் தென்றல் குளுமை
இமயம் போலத் தோன்றும் !
மோனம் மாயும் மோகம் ஏறும்
மோத்தம் இன்ப மூறும்
மோதும் காற்றில் போதம் பாயும்
மோசம் நீங்கிப் போகும்
கானம் கேட்கும் கவிதை பூக்கும்
காலம் வசந்த மாகும்
கவலை தீரும் கடமை நேரும்
கண்நீர் பெருகி ஓடும் !
-விவேக்பாரதி
18.05.2017
வாழ்த்தும் இன்ப நேரம்
வாக்குள் சந்தம் பூக்கும் ! நெஞ்சம்
வாட்டம் நீங்கி ஆடும் !
ஈனம் என்னும் வெய்யில் நீங்க
இடியின் நாதம் கீதம் !
இங்கே வீசும் தென்றல் குளுமை
இமயம் போலத் தோன்றும் !
மோனம் மாயும் மோகம் ஏறும்
மோத்தம் இன்ப மூறும்
மோதும் காற்றில் போதம் பாயும்
மோசம் நீங்கிப் போகும்
கானம் கேட்கும் கவிதை பூக்கும்
காலம் வசந்த மாகும்
கவலை தீரும் கடமை நேரும்
கண்நீர் பெருகி ஓடும் !
-விவேக்பாரதி
18.05.2017
Comments
Post a Comment