இறவின் மடியில்
அடடா....
இந்த இரவின் மடியில்
இரவின் மடியில் எனக்கொரு படுக்கை
இறைவன் அமைக்கின்றான் - அதில்
இறகைப் பதித்தும் பஞ்சைப் பொதித்தும்
இன்பம் சமைக்கின்றான் !
காற்றில் உலாவும் மேகங்கள் மறையக்
காதல் தெளிக்கின்றான் - நிறம்
மாற்றி அமைத்து மண்ணை இருட்டி
மாசுகம் அளிக்கின்றான் !
எத்தனை மாயம் எத்தனை ஜாலம் .
ஏற்றிக் கொடுக்கின்றான் - அவன்
சித்துகள் எல்லாம் யார்சொலக் கூடும் ?
சிக்கல் தொடுக்கின்றான் !
பாரம் மிகுந்த நெஞ்சினைத் தாங்கிப்
பாரம் குறைக்கின்றான் - நல்ல
நேரம் அளித்து நித்திரை தந்து
நினைவை நிறைக்கின்றான் !
கனவினில் தோன்றிக் கவிதைகள் பேசிக்
காலம் கழிக்கின்றான் - அட
நனவினிலென் பிறப்பின் காரணம் கேட்டேன்
நடுவில் விழிக்கின்றான் !
மெய்யறி வென்றால் என்னெனக் கேட்டேன்
மெய்யை உணரென்றான் ! - இறை
ஐயனே இவையும் எதற்கெனக் கேட்டால்
என்னுள் புணர்கின்றான் !
-விவேக்பாரதி
20.03.2017
இந்த இரவின் மடியில்
இரவின் மடியில் எனக்கொரு படுக்கை
இறைவன் அமைக்கின்றான் - அதில்
இறகைப் பதித்தும் பஞ்சைப் பொதித்தும்
இன்பம் சமைக்கின்றான் !
காற்றில் உலாவும் மேகங்கள் மறையக்
காதல் தெளிக்கின்றான் - நிறம்
மாற்றி அமைத்து மண்ணை இருட்டி
மாசுகம் அளிக்கின்றான் !
எத்தனை மாயம் எத்தனை ஜாலம் .
ஏற்றிக் கொடுக்கின்றான் - அவன்
சித்துகள் எல்லாம் யார்சொலக் கூடும் ?
சிக்கல் தொடுக்கின்றான் !
பாரம் மிகுந்த நெஞ்சினைத் தாங்கிப்
பாரம் குறைக்கின்றான் - நல்ல
நேரம் அளித்து நித்திரை தந்து
நினைவை நிறைக்கின்றான் !
கனவினில் தோன்றிக் கவிதைகள் பேசிக்
காலம் கழிக்கின்றான் - அட
நனவினிலென் பிறப்பின் காரணம் கேட்டேன்
நடுவில் விழிக்கின்றான் !
மெய்யறி வென்றால் என்னெனக் கேட்டேன்
மெய்யை உணரென்றான் ! - இறை
ஐயனே இவையும் எதற்கெனக் கேட்டால்
என்னுள் புணர்கின்றான் !
-விவேக்பாரதி
20.03.2017