தனிச்சாலை
யாருமில்லாதொரு சாலை - என் கால் நடமாடும் வேளை நெஞ்சில் போரின் மலை, கண்ணில் நீரின் அலை! நிலவுடன் பேச நடக்கின்றேன் - என் நிழலுடன் ஆடிக் களிக்கின்றேன்! மலர்கள் மலரும் மர்மக் கனவை மானுடக் கண்களில் காண்கின்றேன்! - ஒரு மகிழ்வின் கிரீடம் பூண்கின்றேன்! ஓய்ந்த தெருக்களின் கும்மாளம் - இடம் ஒதுங்கும் தெருநாய்ப் பட்டாளம் வேய்ந்த இருளை வென்று நடக்க வேக நடையில் உற்சாகம் - அதை வேண்டும் நெஞ்சம் இசைபாடும்! மீனும் நிலவும் துணையாக - ஒளி மின்னல் சொல்லில் உருவாக நானும் நடக்கும் நகரத் தெருவில் நல்லமைதி நிலையாக - நான் நடையிடு கின்றேன் தனியாக! கனவை ஆக்கும் மனம்தானே - அந்தக் கனவில் சிக்கி உழல்கிறது தினமும் வருடும் தென்றல் கூட புயலின் போது சுடுகிறது - அதைப் புத்தி பின்தான் உணர்கிறது! பூட்டு போடும் ஆசையொடு - நம் புரியா ஆட்டம் சாவியுடன்! ஆட்டும் கலைஞன்! ஆடும் பொம்மை ! ஆசைப் பூட்டு கயிறாகும் - அது அறுபடத் தெய்வம் முன்தோன்றும்!! -விவேக்பாரதி 30.03.2018