இயற்கை இனிது

பொதிகைமலைத் தென்றல்வழி புறப்பட் டாயாம் புலவர்திரு நாவினிலே வளர்ந்திட் டாயாம் பொதுவுடமை மக்களிடை செழித்திட் டாயாம் பூரணமாய்ப் பக்தியிலே நிலைத்திட் டாயாம் புதுக்கவியில் தளையுடைத்து நடந்திட் டாயாம் புன்னைமர நிழலெனவே திகழும் அம்மா எதுதந்துன் அன்பைநான் பெறுவேன்? சிந்தை எங்குநிறை தமிழேநீ வாழ்க வாழ்க! எந்தப்பா என்றாலும் கொஞ்சும் வண்ணம் எழுதும்பா வலரெங்கள் சியாம ளாம்மா! சந்தப்பா எனத்துள்ளும் சாத கப்பா சந்தோஷப் பா!செம்பா! கட்ட ளைப்பா! முந்தப்பா எனவூக்கும் முனைப்பு டைப்பா! முத்துப்பா! வித்துப்பா! முளைகனிப்பா! அந்தப்பா வலர்தலைமை ஏற்ற மன்றில் அன்புப்பா லருந்தியவன் பாட வந்தேன்! இனிதினிது இனிது இனிதினிது இனிது இனிதிந்த சொற்கள் இனிது இயல்பாகத் தன்னை இறைதந்த தோற்றம் இயற்கையே என்றும் இனிது! இனிதிந்த மனிதம் இனிதிந்த சுற்றம் இனிதிந்த இதயம் இனிது இதயத்துள் வாழும் நம்பிக்கை இனிது இனிதிந்த ஞானம் இனிது! மலர்ச்சத்தம் இனிது வண்டினொலி இனிது மயக்கிடும் நீரும் இனிது மழைவானம் இனிது மணல்வாசம் இனிது மழைக்காலத் தென்றல் இனிது உலைச்சூடும் இனி