பாரதி ஒரு புயல்

- இலக்கியச் சாரல் அமைப்பின் இணைவழிக் கவியரங்கில் படைக்கப்பட்ட கவிதை - சத்தமே இன்றி தவழ்கின்ற மாக்கடல் சீரும் – கரை மீறும் சட்டச் சடசட என்றுடன் காற்றுவந் தாடும் – அலை யோடும் மொத்த மரங்களும் சூறையில் சிக்கிட மோதும் – வலி ஓதும் மூளும் புயல்வர இத்தனையும் நிஜ மாகும் – பொது வாகும் அதுபோல், கண்ணில் தீப்பொறி நெஞ்சில் தவவெறி கவிதைத் தமிழின் சாரதி – இந்த மண்ணில் புதுநெறி வகுக்கப் பிறந்தவன் மாபெரும் புயலே பாரதி! தேசம் முழுவதும் நாசம் நடைபெற தேய்ந்து கிடந்திடு பொழுதினில் – ஒரு ஓசை இன்றியே அடிமைத் தளைநமை ஒடித்து வளைத்த வேளையில், நேசம் எனுமொரு அமுதைத் தாங்கியே நேரில் பூமியில் வந்தவன் – தன் ஆசை அனைத்தையும் யாரும் ரசித்திடும் அருங்கவி யாகவே தந்தவன் எதிலும் துள்ளல்கள் எங்கும் பாய்ச்சல்கள் எல்லா வேளையும் கர்ஜனை – சிறைக் கதவுகள் இடிபட விலங்குகள் பொடிபட கனல்கள் தெறிக்கும் சிந்தனை நதியாய் அன்பினில் மழையாய்க் கருணையில் ஞானத்தில் பெரும் கடலவன் – பகை உதிக்கும் பொழுதினில் உடனே எழுந்ததை உருவில தாக்கும் புயலவன் கண்ணில் தீப்பொறி நெஞ்சில் தவவெறி கவிதைத் தமிழின் சாரதி – இந்த மண்ணில் புதுநெறி வகுக்கப் ப