இப்படி ஒரு படமா? | பார்த்துச் சொல்லுங்கள்!

”மலருடன்தான் விரிகிறதே உலகம் தினந்தினமே! புது விடியல் தினம் வருவதெலாம் முதலில் மலரிடமே! காற்றோடு அசைந்திடும் மலரே நேற்றோடு உனக்கில்லை உறவே நான் புதிதாகவே பிறந்தாகணும் உனைப் போலவே! மறையாது நீகொண்ட சிரிப்பு மாறாது உன் ஒளித் தெறிப்பு ஓர் நாளாகினும் உன் வாழ்க்கையும் பொன்வாழ்க்கையே!!” அவ்வளவுதான் பாடல் என்று காகிதத்தை நீட்டினேன். இது நடந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. நண்பன் இரவி சரஸ் ஒரு குறும்படம் இயக்க ஆசை கொண்டு என்னிடம் சொன்னான். சரி அதில் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு நீங்கள்தான் எல்லாமே என்றும் சொன்னான். முதலில் விளங்கவில்லை. பின்னர் தெரியவந்தது என்னுடைய எழுத்துகளுக்குப் புதிய களம் கொடுக்க முயற்சிக்கிறான் இரவி என்பது. சரி என்று ஒப்புக் கொண்டேன். “நீங்கள் ஒரு பாட்டும்! படத்தின் பின்னணி வசனங்களும் எழுதித் தர வேண்டும்” என்றான். “சரி! இந்தா பாடல்!” மேலுள்ள பாட்டை மட்டும் முதலில் எழுதிக் கொடுத்தேன். ”இவ்வளவுதான் பாட்டா” என்றான். "ஆம்! பின்னால் படத்தை முடித்துக்கொடு, பின்னணி வசனங்களைக் காட்சிகளைப் பார்த்து எழு