வாணியம்மா கொச்சகக் கலி

இரண்டு நாட்களுக்கு முன், இரவு மணி 2 மணிவரை கவிஞர் சுந்தராவோடு வாட்ஸாப்பில் நடந்த உரையாடலில் கம்பனை வியந்து பாடத் தொடங்கி, கம்பனை ஆட்கொண்ட கலைவாணி எங்களையும் ஆட்கொள்ள பேச்சுத் தமிழிலேயே அந்தப் பேச்சியம்மாவுக்குப் பக்திப் பாட்டு அரங்கேறியது. விவேக்பாரதி: எங்கிருந்து கொண்டுவந்து கொட்டுனதோ? கம்பனுக்கே அங்கிருந்து யாரள்ளி விட்டதுவோ? புரியலையே! நெஞ்சவொரு சொல்லுக்குள்ள நெலாத்தூரம் அர்த்தம்வெச்சு செஞ்சுப்புட்ட மகராசன் தேர்ந்ததெங்க? தெரியலையே! சுந்தரராசன்: கொட்டிக் கெழங்குவித்த கோமகளக் கூப்புடுவோம்! அட்டியில்லா மவராசி, அவனுக்குக் கொடுத்ததெல்லாம் எட்டநிக்கும் எங்களுக்கும் எறிஞ்சுவுடு; பொறுக்கியதத் தட்டுவச்சுத் தின்னபடி தமிழ்குடிச்சு பொளப்போமே! விவேக்பாரதி: ஆமாண்ணே நெசந்தானே அவளுக்கே அதுதெரியும் பூமேல நின்னவளும் புள்ளையத்தான் சோதிக்க வேவாத வெய்யிலில வேண்டியிவன் பாடினதும் பாவாம பையவந்தா பாரதிய கூப்புடுவோம்! சுந்தரராசன்: பாட்டம்மா; பாட்டனுக்கும் பேருவச்ச பாட்டியம்மா; ஏட்டம்மா; தலையிலதான் எளுதிவச்ச மவராசன் வூட்டம்மா; எங்களுக்கே ஒலகம்மா! பொலவனுங்க கூட்டம்மா; சீலையப்போல் கொணத்தம்மா வாராயோ! விவேக்பாரதி