கார்த்திகைக் களிப்பு

-அலுவலகம் விட்டு வீடு திரும்புகையில் வீதி விளக்குகளைக் கண்டு மனம் வியந்தபோது- வார்த்திடும் நெய்யில் வளர்ந்திடும் ஜோதி, வடிவங்களாய் ஆர்த்திடும் வானத்(து) அழகுவேடிக்கை, அளவுடனே வேர்த்திடும் மேகம், விளையும் ஒளிமயம் வீதியெல்லாம் கார்த்திகை வந்ததைக் காட்டிட நெஞ்சம் களித்ததின்றே !! -விவேக்பாரதி 29.11.2020