வண்ணக் கனா படைத்தாய் வைரமுத்து!

கவிப்பேரரசு வைரமுத்து அண்மையில் வெளியிட்டுள்ள கனாக் கண்டேன் பாடல் கேட்டேன். கண்ணன் எழுதும் காதல் கவிதை என்ற தலைப்பே உள்ளே நுழைய வைத்தது. பழைய மரபில் கால் ஆழமாக வேரூன்றியவர் அவர் என்பது, இந்தப் பாடலிலும், இதற்கு முன்னதாக கொண்டல் மேகம் ரெண்டு என்ற பாடலிலும் வெட்ட வெளிச்சமாகிறது. கொண்டல் மேகம் ரெண்டு பாடல், அண்ணாமலையார் காவடிச் சிந்து வகையைச் சார்ந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த அம்பிகாபதி படத்தில் கூட அந்தமேவும் அரவிந்த மாமலரில் வந்த வேத வல்லியாள் என்று நடையிலேயே துள்ள வைக்கும் பாடல் உண்டு. இது அதே சந்தம். அதனை சங்கர் மகாதேவனின் குரலிலும், தவிலும் நாதஸ்வரமும் துள்ளும் இசையிலும் நம்மை ஆட வைத்திருப்பார்கள். அதன் தாக்கமே தினசரி கேட்கும் பாடலாக மாற்றியுள்ள நிலையில், தற்போது கனாக்கண்டேன் வெளியாகி கொள்ளை கொண்டுள்ளது. https://www.youtube.com/watch?v=h99r2UoR1go https://www.youtube.com/watch?v=agZXNt8rbJI ஆண்டாள் எழுதியதுபோலவே கலிப்பா வகையில் களிப்பாக அமைந்திருக்கிறது பாடல். அணில் ஸ்ரீநிவாசன் இசையில், ஹரிசரன் உயிரையே உருக்கி குரலாய்க் கொடுத்திருக்க, ஒவ்வொரு துளியும் ஆயிரம் தடா நெய்